நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு. இவர், சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் வடிவேலுவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ’மாமன்னன்’ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடித்திருக்கிறார் வடிவேலு. மேலும், பி.வாசு இயக்கி வரும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார்.

இந்நிலையில், மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். 87 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.