fbpx

#Bignews : ஆவின் பொருட்களின் விலை திடீர் உயர்வு.. இன்று முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு…

ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.. அதன்படி இந்த உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. இதன் காரணமாக தற்போது தயிர் மற்றும் நெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி உள்ளது.. அதன்படி, 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.. இதே போல் 200 கிராம் தயிர் விலை 25 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது..

பிரீமியம் தயிர் ஒரு லிட்டரின் விலை 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.. ஒரு லிட்டர் நெய் விலை 535 ரூபாயில் இருந்து 580 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.. அரை லிட்டர் நெய் 275 ரூபாயில் இருந்து 290 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. எனினும் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.. இந்த விலை உயர்வு ஜூலை 21, அதாவது இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

இலங்கையில் மோசமடையும் நிலைமை..! வேலைத் தேடி வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!

Thu Jul 21 , 2022
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டு மக்கள் வேலைவாய்ப்பு தேடி அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்ல தொடங்கி உள்ளனர். கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் – ரஷ்யா போர் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்ததால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அந்நாட்டு அரசு உள்ளது. இதனால், உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து, அவற்றுக்கு […]
”இலங்கை மக்கள் மீதான இரக்கத்திற்கு மிகுந்த நன்றி”..! முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு சிங்களர் கடிதம்..!

You May Like