சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன் தினம் இரவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான விதத்தில் மெரினா நீச்சல் குளம் அருகே 2 இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருநின்றவூரில் இருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பிரபல இருசக்கர வாகனம் திருடரான திருநின்றவூரை சேர்ந்த 17 வயது சிறுவனும் அவருடைய நண்பனமான சத்திய பிரதீப்( 20) என்பதும் திருநின்றவூரில் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு எழும்பூரில் விற்பனை செய்ய வந்தபோது காவல்துறையிடம் சிக்கியது தெரிய வந்தது.
பிரபல இருசக்கர வாகன திருடனான 17 வயது சிறுவன் பகலில் மின்சார ரயிலில் சமோசா விற்பனையும், இரவு சமயங்களில் பைக் திருடுவதையும் தொழிலாக வைத்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதே போல அந்த சிறுவன்மீது திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் இருசக்கர வாகன திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.