fbpx

சென்னை மெரினா நீச்சல் குளம் அருகே……! 2 பைக் திருடர்கள் அதிரடி கைது……!

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன் தினம் இரவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான விதத்தில் மெரினா நீச்சல் குளம் அருகே 2 இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருநின்றவூரில் இருப்பது தெரியவந்தது.

அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பிரபல இருசக்கர வாகனம் திருடரான திருநின்றவூரை சேர்ந்த 17 வயது சிறுவனும் அவருடைய நண்பனமான சத்திய பிரதீப்( 20) என்பதும் திருநின்றவூரில் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு எழும்பூரில் விற்பனை செய்ய வந்தபோது காவல்துறையிடம் சிக்கியது தெரிய வந்தது.

பிரபல இருசக்கர வாகன திருடனான 17 வயது சிறுவன் பகலில் மின்சார ரயிலில் சமோசா விற்பனையும், இரவு சமயங்களில் பைக் திருடுவதையும் தொழிலாக வைத்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதே போல அந்த சிறுவன்மீது திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் இருசக்கர வாகன திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

Next Post

புரட்டி எடுத்த கனமழை..!! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள்..!! உரிமையாளர் கதறல்..!!

Fri May 26 , 2023
சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியது. இதில் நகரமே வெள்ளக்காடாக மாறியது. சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அதற்குள் காரில் […]

You May Like