fbpx

Birth Certificate | ”இனி அனைத்திற்கும் பிறப்புச் சான்றிதழ்..!! நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்..!!

பல்வேறு வகையான இந்திய அரசின் ஆவணங்களை பெறுவதற்கான ஒற்றை ஆவணமாக பிறப்புச் சான்றிதழை பயன்படுத்தலாம் என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

நாட்டில் பல்வேறு வகையான அடையாளச் சான்றிதழ் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் போன்றவை கூடுதல் முக்கியத்துவம் உள்ள ஆவணங்களாக கருதப்படுகின்றன. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தராய் பிறப்புச் சான்றிதழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஆகஸ்ட் 1ஆம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவின் மூலம், கல்வி நிலையங்களில் சேர்வது, வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவது, ஆதார் கார்டு பெறுவது, வாக்காளர் அடையாள அட்டைக்கு பயன்படுத்துவது, திருமண பதிவு போன்ற அனைத்து வகையான ஆவணங்களையும் பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழை ஒற்றைச் சான்றாக எடுத்துக் கொள்ளும் நடைமுறை இந்த மசோதா மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், பிறப்பு சான்றிதழ் பெறுவது எளிதாக்கப்பட்டு இருப்பதாகவும், இணைய வழியாக பிறப்பு இறப்பு பதிவுகளை எண் பதிவு மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பிறப்பு இறப்புச் சான்றிதழ்களை கண்காணிப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளால் வலிமையான தரவு தளம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படும் என்றும், இந்த தரவு தளத்தை பாதுகாக்கவும், புதுப்பிக்கவும், கண்காணிக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், இதன் மூலம் மக்களுக்கான சேவை உறுதி செய்யப்படும் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

உடன் பணியாற்றிய பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்துவிட்டு தலைமறைவான காவலர் நள்ளிரவில் தர்ணா போராட்டத்தில் குதித்த பெண்ணால் பரபரப்பு…..!

Tue Aug 8 , 2023
திருமணம் செய்து கொள்வதாக கூறி, உடன் பணியாற்றிய பெண்ணை கர்ப்பமாக்கி, திருமணம் செய்துவிட்டு, பின்பு தலைமறைவான காவலரை கண்டிக்கும் விதமாக, இளம் பெண் ஒருவர் அந்த காவலரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் தண்டலை வடக்கு தெருவை சேர்ந்த அஜித்(28) என்ற இளைஞர், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில், இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் தான், இவருடைய வீட்டின் […]

You May Like