fbpx

பிறப்புச் சான்றிதழ் புதிய விதி “அக்டோபர் 1 முதல் அமல்”..! இதனால் என்னென்ன மாற்றங்கள்..!

பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு நபரின் சட்டபூர்வமான இருப்பை நிரூபிக்கிறது. பிறப்புச் சான்றிதழலில் புதிதாகப் பிறந்த குழந்தையின் பிறந்த தேதி, பிறந்த இடம், பாலினம் மற்றும் பெயரை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கூறி வந்த நிலையில், அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறைஅமைச்சகம் அறிவித்து உள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 அக்டோபர் 1, 2023 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஆதார் எண், திருமண பதிவு அல்லது அரசு வேலை நியமனம் ஆகியவற்றிற்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பதிவாளர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 இன் அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம், 2023 மசோதா அனுமதிக்கிறது. இந்த புதிய சட்டம் அக்டோபர் 1, 2023 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

Kathir

Next Post

ஆசிய கோப்பை சூப்பர்4!… கடைசி பந்தில் ட்விஸ்ட்!… வெளியேறியது பாகிஸ்தான்!... பைனலில் இந்தியா-இலங்கை மோதல்!

Fri Sep 15 , 2023
ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில், கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தில் இலங்கை அணி த்ரில் வெற்றிபெற்றது. இதன்மூலம் பைனலில் இந்திய அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளது. கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர்-4′ போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளி பெற்றிருந்த நிலையில், பைனலுக்கு செல்ல இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கின. இருப்பினும் […]

You May Like