fbpx

பள்ளி வகுப்பறையில் பீர் பாட்டிலுடன் பர்த்டே பார்ட்டி..!! 7 மாணவிகள் சஸ்பெண்ட்..!! வேதனையில் விபரீத முடிவு..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி பிறந்தநாள் வந்திருக்கிறது. இதனால் மாணவியின் பிறந்தநாளை சக மாணவிகள் கொண்டாட முடிவு செய்தனர்.

அதன்படி, பீர் பாட்டில்கள், ஜூஸ், கேக் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டு, மதிய உணவு இடைவேளையின் போது வகுப்பறையில் யாரும் இல்லாத சமயத்தில் மாணவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர். அப்போது, பிறந்தநாள் மாணவி உள்பட 7 மாணவிகள் பங்கேற்று ஆட்டம், பாட்டத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அப்போது ஜூஸ் பாட்டிலில் பீரைக் கலந்து குடித்துக் கொண்டு ஆட்டம் போட்டதாக தெரிகிறது. திடீரென எதிர்பாராமல் மாணவர்கள் சிலர் வகுப்பறைக்குள் நுழைந்தனர். பின்னர், மாணவிகளின் ஆட்டத்தை கண்டு அதிா்ச்சியடைந்தனர். பின்னர், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் சென்று மாணவிகளின் இந்த செயல் குறித்து புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட 7 மாணவிகளையும் அழைத்து வன்மையாக கண்டித்துள்ளார். மேலும், மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் 7 மாணவிகளையும் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், அவர்களில் ஒரு மாணவி கடந்த 28ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நிலக்கோட்டை தனியார் மரு்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையே, அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மாணவிக்கு நேற்று முன்தினம் மீண்டும் உடல்நிலை மோசமானது. இதனால் அவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

சூப்பர் ஓவரில் தெறிக்கவிட்ட ரிங்குசிங்..!! ஹாட்ரிக் சிக்ஸால் நொந்துபோன பவுலர்..!! வைரல் வீடியோ..!!

Sun Sep 3 , 2023
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஃபினிஷராக திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. அவரின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணிக்கு அப்படியொரு பினிஷர் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அந்த ஏக்கத்தை கடந்த ஐபிஎல் போட்டியில் தீர்த்து வைத்தவர் ரிங்குசிங். கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் தேவை என்ற நிலையில், 5 சிக்ஸர்களை அடுத்தடுத்து விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவரது பினிஷிங் திறமையை பார்த்த பிசிசிஐ, இவருக்கு அயர்லாந்து […]

You May Like