இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மாண்டஸ்’ புயல் மற்றும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஓரளவு மழை குறைந்த நிலையில், அடுத்தடுத்து புயல்கள் உருவானதால் மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன.

அந்தவகையில், இந்த ஆண்டு புயல் மற்றும் கனமழை காரணமாக அதிகளவில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ’மாண்டஸ் புயல்’ காரணமாக கிட்டத்தட்ட 20 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களாக விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனை ஈடு செய்யும் வகையில், இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.