fbpx

BJP | ‘நிறைய சிரமங்களுக்கு பிறகு பாஜக குடும்பத்தில் இணைந்துள்ளேன்’..!! விஜயதரணி பேச்சு..!!

“வேறொரு இடத்தில் இருப்பது போன்ற எந்த உணர்வும் இல்லை. என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது” என்று பாஜகவில் சேர்ந்தது குறித்து நெகிழ்ந்துள்ளார் முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி முதல்முறையாக பேசினார். அப்போது, “நமது நாட்டை பிரதமர் மோடி எவ்வாறாக மாற்றியிருக்கிறார் என்பதை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. அதன் வெளிப்பாடு தான் என்னை போன்றவர்கள் கவர்ந்திழுக்கப்பட்டு பாஜகவில் சேர்ந்து வருகின்றனர்.

எனக்கு மிக்க மகிழ்ச்சி. வேறொரு இடத்தில் இருப்பது போன்ற எந்த உணர்வும் எனக்கில்லை. என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது. நேற்று திருப்பூரில் பாஜக தொண்டர்கள் என்னை அரவணைத்துக் கொண்டு ஆதரித்த விதம் என் கண்களை நிறைய வைத்துள்ளது. பிரதமர் மோடி மிகப் பெரிய மாற்றத்தை பெண்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். முத்தலாக் நடைமுறையை ரத்து செய்துள்ளார். இதெல்லாம் நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, அதற்கு நிதி ஒதுக்கியும் ஆதரித்துள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் இருக்கும் அரசு அப்படியில்லை. திமுக, அதிமுக என எந்த அரசாக இருந்தாலும், 110 விதியின் கீழ் கூட திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால், நிதி ஒதுக்கமாட்டார்கள். விளம்பரம் செய்வதோடு அந்த திட்டங்களின் கதை அன்றே முடிந்துவிடும். சில நேரங்களில் அடிக்கல் கூட நாட்டுவார்கள். எனினும், திட்டங்கள் நிறைவேறாது.

நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு, நிறைய சிரமங்களுக்கு பிறகு ஒரு நல்ல இடத்துக்கு வந்துள்ளேன். நான் இனி பாஜக குடும்பத்தில் ஒருவர். பாஜகவுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்தார்.

English Summary : After a lot of difficulties I have joined the BJP family – Vijayadharani

Read More : RIP | பெரும் சோகம்..!! பழம்பெரும் பிரபல நாடக, டிவி நடிகர் அடடே மனோகர் காலமானார்..!!

Chella

Next Post

'திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது'..!! 'முற்றிலும் அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்சி'..!! PM Modi விளாசல்..!!

Wed Feb 28 , 2024
“தமிழ்நாட்டில் இனி திமுகவைத் தேடினாலும் கிடைக்காது” என நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளதால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, திமுகவை மிகவும் கடுமையாக தாக்கிப் பேசினார். “தமிழக மக்கள் பாஜக பக்கம் நிற்பதை நான் பார்க்கிறேன். பாஜக அரசு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது. தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. தமிழகத்தை […]

You May Like