பீகாரில் பாஜக – ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.. எனினும் இந்த கூட்டணியில் கடந்த சில நாட்களாக விரிசல் ஏற்பட்டு வந்தது.. பாஜக மீது ஐக்கிய ஜனதா தள கட்சியினர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.. இந்த சூழலில் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்ததாக கூறப்படுகிறது..
இந்நிலையில் பாஜக உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் கட்சி முறித்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியான வண்னம் உள்ளது.. அதற்கேற்றார் போல் பீகார் தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவதால் பீகாரில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது..
பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் ஆட்சியமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் பீகார் ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க முதல்வர் நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
இதற்கிடையில், ஆளுநர் பகு சவுகானை சந்திக்க பாஜகவும் நேரம் கோரியுள்ளது. மாநில அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் இன்று அளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் இல்லத்தில் இன்று காலை பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது..