fbpx

சிஎஸ்கே-வின் வெற்றிக்கு பாஜக உறுப்பினர் தான் காரணம்..!! பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை..!!

சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் காரணம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 96 ரன்களும், விரித்திமான் சாஹா 54 ரன்களும், சுப்மன் கில் 39 ரன்களும் விளாசினர்.

இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நின்ற பின்னர் இரவு 12.10 மணிக்கு தொடங்கிய போட்டி, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் சென்னை அணி வெற்றி பெற 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெயிக்வாடும், டெவன் கான்வேயும் கைகோர்த்து நல்ல தொடக்கத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சென்னை அணிக்கு 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடித்த ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதிசெய்தார். இதன்மூலம் 5-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸின் சாதனையை சமன் செய்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜாவை பாராட்டி பதிவிட்டுள்ளார். அவரின் அந்த பதிவில், ”கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி. ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்! பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

செம குட் நியூஸ்..!! இனி ரேஷன் கடைகளில் 35 பொருட்கள் கிடைக்கும்..!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!

Tue May 30 , 2023
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது. பொதுமக்களுக்கு பல புதிய அறிவிப்புகளை வழங்கி வரும் சூழலில், இப்போது மற்றொரு முக்கிய முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. அந்த வகையில் இனிமேல் பால், பிரட், மசாலாப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், குடைகள் மற்றும் டார்ச்கள் ஆகிய 35 பொது பயன்பாட்டு பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. […]

You May Like