fbpx

கோவாவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைய ‘இட்லி சாம்பார் வடை’ தான் காரணம்..!! – பாஜக MLA குற்றசாட்டு

கோவாவில் சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு இட்லி-சாம்பார் மற்றும் வடை பாவ் தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ மைக்கேல் லோபோ குற்றம் சாட்டியுள்ளார். கடற்கரை குடில்களில் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதே கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்திற்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்குக் காரணம் என்று கோவா அமைச்சர் கூறினார். 

வடக்கு கோவாவின் கலங்குட்டில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய லோபோ, கடலோர மாநிலத்திற்கு குறைவான வெளிநாட்டினர் வருகை தந்தால் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்ல முடியாது. பெங்களூரைச் சேர்ந்த சிலர் குடில்களில் ‘வடை பாவ், இட்லி சாம்பார்’ விற்பனை செய்கிறார்கள். இதனால் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்தில் சர்வதேச சுற்றுலா குறைந்து வருகிறது.

மேலும், அனைத்து பங்குதாரர்களும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். சுற்றுலா துறை மற்றும் இதர பங்குதார்ரகள் இணைந்து கூட்டம் கூட்டி, கோவாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஏன் குறைந்துள்ளது என்பதற்காக காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read more:“சார், ப்ளீஸ் என்ன விட்டுருங்க” கதறி துடித்த சிறுமி; 3 ஆண்டுகளாக டியுஷன் ஆசிரியர் செய்து வந்த காரியம்…

English Summary

BJP MLA blames ‘idli-sambar’, ‘vada pav’ for decline in international tourists in Goa

Next Post

படத்திற்கு சம்பளம் வாங்காமல் லாபத்தில் பங்கு பெற்ற முதல் இந்திய நடிகர் இவர் தான்..! ரஜினி, கமல், ஷாருக் இல்ல..

Fri Feb 28 , 2025
Instead of getting paid to act in films, actors are now starting to share in the film's business and profits.

You May Like