fbpx

27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக..? கருத்துக் கணிப்புகளை நிஜமாக்கும் அமோக வெற்றி..!!

டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. ஆனால், பாஜக – ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டியில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜகவே வெற்றிபெறும் எனத் தெரிவித்துள்ளன.

இதை மெய்ப்பிக்கும் வகையில், வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை தாண்டி சுமார் 46 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி வெறும் 23 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் வகிக்கிறது.

கருத்துக்கணிப்புகளை நிஜமாக்கும் வகையில் டெல்லியில் அமோக வெற்றியை நோக்கி பாஜக நகர்ந்து வருகிறது. கடந்த 3 சட்டசபை தேர்தல்களில் இல்லாத அளவு ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

Read More : ”அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”..!! நம்பி அனுப்பிய கணவன்..!! முதலிரவு முடிந்ததும் ஓட்டம் பிடித்த மனைவி..!! அதிர்ந்துபோன குடும்பத்தார்

Chella

Next Post

தனியார் பள்ளியின் விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி..!! நேரில் பார்த்து ஷாக்கான தோழிகள்..!! நடந்தது என்ன..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Sat Feb 8 , 2025
Govasree was found hanging in the hotel's bathroom.

You May Like