fbpx

“மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவினர் எதையும் செய்வார்கள்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக அனைத்து தொண்டர்களுக்கும் பொதுவானது; நிர்வாகிகளுக்கு மட்டுமே சொந்தமில்லை என்று கூறியுள்ளார். ஆட்சி அனைவருக்கும் பொதுவானது; அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. திமுகவினர் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து ஒற்றைச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும். அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பொது நிகழ்ச்சிகளில் கவனமுடன் பேச வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், பாஜகவை பொறுத்தவரையில், இது அவர்களுக்கு வாழ்வா சாவா என்ற தேர்தல். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவினர் எதையும் செய்வார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்திருக்கிறது. அதனால் அவர்களுக்கு கோபம் அதிகமாகும், நம்மை நோக்கி பாய்வார்கள் என கூறியுள்ளார்.

Kathir

Next Post

அடேங்கப்பா அதிமுகவில் உறுப்பினராக மாற இத்தனை கோடி பேர் விண்ணப்பம் செய்து இருக்கிறார்களா…….? கட்சி தலைமை வெளியிட்ட புதிய அறிவிப்பு……!

Sat Aug 5 , 2023
ஏற்கனவே அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பதாக அந்த கட்சியின் தலைமை மார்தட்டிக் கொள்கிறது. இந்த ஒன்றரை கோடி தொண்டர்கள், அதிமுகவின் பொது செயலாளராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, கட்சியின் உறுப்பினராக சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படும் நிலையில், தற்போது ஒரு புதிய இலக்கை இந்த கட்சி எட்டி உள்ளது. சென்ற ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு அதிரடி மாற்றங்களை கட்சியில் செய்து வருகிறார் […]

You May Like