fbpx

12 மாநிலங்களில் தனித்து ஆட்சி செய்யும் பாஜக..!! காங்கிரஸ் எத்தனை மாநிலங்களில் தெரியுமா..?

4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளால், பாஜக தனித்து ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியாணா, குஜராத், கோவா, அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், 4 மாநில முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.

சத்தீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பாஜக தனித்து ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இதோடு மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகித்து வருகிறது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வியடைந்து, தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

எனவே, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய 3 மாநிலங்கள் மட்டும் காங்கிரஸ் தனித்து ஆட்சி செய்யும் மாநிலங்கள் ஆகும். இது தவிர பீகார், ஜார்கண்ட் கூட்டணி அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும். இந்த தேர்தல் முடிவுகள் மூலம் வட இந்தியாவில் மிகப் பெரிய எதிர்கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது.

டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சி செய்யும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளதால், வட இந்தியாவில் மிகப் பெரிய எதிர்கட்சி ஆம் ஆத்மி என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜாஸ்மின் ஷா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டில் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலும் நிலுவையில் உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பல எம்.பிக்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், அவர்களின் மக்களவை தொகுதிகள் காலியாகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், தற்போது காலியாகும் மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.

Chella

Next Post

புயலின் தீவிரத்தை உணர்த்தும் எச்சரிக்கை கூண்டு!… 5 மற்றும் 7 என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

Mon Dec 4 , 2023
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு `மிக்ஜம்’ என பெயரிடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. இது நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் புயலாக கரையை கடக்கக்கூடும் […]

You May Like