fbpx

பிறப்புறுப்பில் ரத்தம்..!! ஆடையின்றி உதவி கேட்ட சிறுமி..!! அவமதித்து அனுப்பிய மக்கள்..!! கூட்டு பலாத்காரம்..? ஷாக்கிங் தகவல்..!!

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் 12 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உஜ்ஜையினில் இருந்து 15 கிமீ தூரத்தில் இருக்கும் பாத்நகர் என்ற பகுதியில் அரங்கேறியுள்ளது. அந்த சிறுமிக்கு எப்படி தாக்குதல் நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. பாத்நகர் பகுதியில் நேற்று அந்த சிறுமி ஆடையின்றி, உடல் முழுக்க ரத்தத்தோடு நடந்து சென்றுள்ளார். முக்கியமாக சிறுமி உறுப்பில் ரத்தத்தோடு அவர் நடந்து சென்றுள்ளார். அவர் அங்கே இருக்கும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவை தட்டி உதவி கேட்டுள்ளார்.

எனக்கு ஆடை இல்லை. உடலில் ரத்தமாக இருக்கிறது. அதனால் என்னை காப்பாற்றுங்கள். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எனக்கு உதவி செய்யுங்கள் என்று கெஞ்சியுள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அவர் உதவி கேட்ட எல்லா வீட்டிலும் உள்ள ஆண்கள், பெண்கள் அவரை துரத்தி அடித்துள்ளனர். நீ உள்ளே வரக்கூடாது. வெளியே போ என்று துரத்தி அடித்துள்ளனர். சிலர் அவரிடம் பேசாமல் கூட துரத்தி அடித்துள்ளனர்.

சிலரிடம் எனக்கு உதவி வேண்டாம். எனக்கு தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதுவும் கூட அவருக்கு கிடைக்கவில்லை. போலீசார் அளித்த தகவலின் படி, சிறுமி இறுதியில் ஒரு ஆசிரமத்தை அடைந்தார். அங்கேதான் அவருக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. அங்கே ஒரு சாமியார் சிறுமியை ஒரு துண்டுடன் மூடி, மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அதோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிறுமியின் மருத்துவப் பரிசோதனையில் பலாத்காரம் உறுதி செய்யப்பட்டது. கூட்டு பலாத்காரம் அவர் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு அந்த சிறுமி மிக மோசமாக தாக்கப்பட்டு இருக்கலாம், கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த சிறுமியால் பேச முடியவில்லை. அவரின் வாய் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் கஷ்டப்பட்டு பேசி உள்ளார். இதன் காரணமாக அவரால் எதையும் சொல்ல முடியவில்லை. அவருக்கு சுயநினைவில் பிரச்சனை உள்ளது.

அவரின் பேச்சை பார்த்தால் அவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு ரத்தம் கொடுக்க கூட யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசாரே கடைசியில் அவருக்கு ரத்தம் கொடுத்து உதவினர். அவர் மீது யார் இந்த தாக்குதல் நடத்தியது என்று இன்னும் தெரியவில்லை. அவரின் பெற்றோர் யார், அந்த சிறுமி எங்கிருந்து வந்தார் என்றும் தெரியவில்லை. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Chella

Next Post

”விலகிய எடப்பாடி.. இணையும் ஓபிஎஸ்”..!! பாஜகவுடன் கூட்டணியா..? நாளை அறிவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்..!!

Wed Sep 27 , 2023
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி உண்டா என்பது குறித்து நாளை அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக உடனான தனது உறவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தாங்கள் வெளியேறி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அதிமுக அறிவித்துவிட்டது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டவர்களுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை […]

You May Like