கடன் வாங்கியவர்களிடம் கடன் வசூலிப்பது குறித்த புதிய உத்தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது..
கடன் வசூலிப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும், அவை முறையாக பின்பற்றப்படாததால் நேற்று கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்தது.. அந்த உத்தரவில் “ கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை மீறி வருவதாக தெரிய வந்துள்ளது..
வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களது கடன் வசூல் முகவர்கள், கடன் பெற்றவர்களை எந்த வகையிலும் வாய் மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.. எந்த வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது.. தொலைபேசியில் மிரட்டல் விடுக்கக்கூடாது. கடன் தவணையை செலுத்த வேண்டும் என்று இரவு 7 மணிக்கு பிறகும், காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள கூடாது.. “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த புதிய உத்தரவுகள் அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறு சீரமைப்பு நிறுவனங்கள் அகில இந்திய நிதி ஆகியவற்றுக்கு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது..