fbpx

குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது!… கணவருக்கும் விடுமுறை அளிப்பது அவசியம்! ஐகோர்ட் கிளை!

மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கும் விடுமுறை வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உள்ளது. பெண்களுக்கு பிரசவ காலத்தில் சம்பளத்துடன் இந்த விடுப்பு வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்கள் தங்கள் பெண் பணியாளர்களுக்கு சில மாதங்கள் மட்டும் விடுப்பு அளிக்கின்றன. இந்த நிலையில் மனைவியின் பிரசவத்தின்போது தனக்கு விடுமுறை வழங்கவில்லை என தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, ”மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம். மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க கணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

Sunita Williams | சந்திரயான்-3 பற்றி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் என்ன கூறினார் தெரியுமா..?

Wed Aug 23 , 2023
இரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கவுள்ள நிகழ்விற்கான தனது உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும் சந்திர தென் துருவத்தில் பிரக்யான் ரோவரின் செயல்பாடுகளிலிருந்து உருவாகும் அறிவியல் ஆராய்ச்சிகளை எதிர்நோக்குவதாகவும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பகிர்ந்துள்ளார். நேஷனல் ஜியோகிராஃபிக் இந்தியா பகிர்ந்த அறிக்கையில், சந்திர ஆய்வின் முக்கியத்துவத்தை சுனிதா வில்லியம்ஸ் […]

You May Like