fbpx

நீ என்கிட்ட பேசலனா அந்த வீடியோவ வெளியே விட்ருவேன்….! மிரட்டிய காதலன் கடைசியில் நடந்த ட்விஸ்ட்…..!

திருப்பூர் மாவட்டம்.பூலுவப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (26) இவர் திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு இளம் பெண்ணை ஷாஜகான் காதலித்ததாக தெரிகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய நிலையில், இவர்களுடைய காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இத்தகைய நிலையில்தான் அந்தப் பெண் ஷாஜகான் உடன் பேசுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது. பலமுறை ஷாஜகான் தன்னுடைய காதலியை செல்போன் மூலமாக அழைத்த போதும் அவர் சரியான முறையில் அவருடன் பேசவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் கொண்ட ஷாஜகான், காதலியை வேறு ஒரு எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு இருவரும் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் அதிர்ச்சிக்கு ஆளான அந்த இளம் பெண், இது தொடர்பாக திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஷாஜகானை கைது செய்தனர்.

Next Post

போதையில் தள்ளாடிய இளம்பெண்..!! படுக்கை அறையில் நிர்வாணம்..!! இந்திய மாணவர் செய்த அதிர்ச்சி செயல்..!!

Tue Jun 20 , 2023
பிரிட்டன் நாட்டின் கார்டிப் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த மாணவரான பிரீத் விகல் என்பவர் வசித்து வந்தார். கடந்தாண்டு ஜூன் 3ஆம் தேதி இரவு அவர், தனது வீட்டிற்கு அருகே உள்ள கிளப்பிற்கு சென்றுள்ளார். அப்போது இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் இரவு விருந்துக்காக அங்கு வந்துள்ளார். அங்கு அவர்கள் மது போதை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை பிரீத் விகல் கவனித்து வந்துள்ளார். பார்ட்டி முடிந்த நிலையில், நண்பர்கள் அனைவரும் தாங்கள் […]
போதையில் தள்ளாடிய இளம்பெண்..!! படுக்கை அறையில் நிர்வாணம்..!! இந்திய மாணவர் செய்த அதிர்ச்சி செயல்..!!

You May Like