பிரபல போஜ்புரி எழுத்தாளர் பிரஜ்கிஷோர் துபே, அவரது நண்பரின் குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போஜ்புரி இலக்கியத்தில் தனது பங்களிப்பிற்காக குடியரசுத் தலைவரால் விருது பெற்ற துபே, சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் நகர் பகுதியில் உள்ள நண்பரின் ஃப்ளாட்டின் சாவியை எடுத்துச் சென்று, ஒரு முக்கியமான கட்டுரையை எழுதுவதற்காக அமைதியான முறையில் தனியாக இருக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் அங்கே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், எழுத்தாளர் தற்கொலைக்கான குறிப்பை விட்டுச் சென்றுள்ளார், அங்கு யாரையும் குற்றம் சொல்லவில்லை. அதேநேரம், கழிவறையில் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், முகம் தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் கிடந்ததாகவும், கால் நாற்காலியில் கிடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அவர் தற்கொலைக் குறிப்பை விட்டுச் சென்றிருந்தாலும், அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட விதத்தில், அவர் கொலை செய்யப்பட்டது போல் தெரிகிறது என்பதால் இது தற்கொலையாக இருக்கலாம் என்று உள்ளூர் போலீசார் கூறினர். இறந்தவரின் குடும்பத்தினர் கொலையாக சந்தேகிக்கின்றனர்.