fbpx

BREAKING | ரூ.100 கோடி மோசடி..!! அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில், கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் இரண்டு முறை அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்’ என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து தலைமறைவாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரை இன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Read More : சிப்பாய் பேயால் வேட்டையாடப்பட்ட இளவரசி..!! அந்த ரூம்ல ஏதோ இருக்கு..!! இருட்டில் நடக்கும் பயங்கர சம்பவம்..!!

English Summary

AIADMK former minister MR. Vijayabaskar has been arrested by the CBCID police.

Chella

Next Post

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை..!! இந்த மாவட்டங்களில் கனமழை தொடரும்..!! எச்சரிக்கும் தனியார் வானிலை ஆய்வாளர்..!!

Tue Jul 16 , 2024
Private meteorologist Pradeep John has informed that southwest monsoon has intensified in Tamil Nadu.

You May Like