15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, பிப்.8ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதாகவும், பிப்.15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவும், அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களுக்கும், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 5 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
15 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை :
1. ஆந்திரா – 3
2. பீகார் – 6
3. சத்தீஸ்கர் – 1
4. குஜராத் – 4
5. ஹரியானா – 1
6. ஹிமாச்சல் பிரதேசம் – 1
7. கர்நாடகா – 4
8. மத்தியப்பிரதேசம் – 5
9. மகாராஷ்டிரா – 6
10. தெலங்கானா – 3
11. உத்தரப்பிரதேசம் – 10
12. உத்தரகாண்ட் – 1
13. மேற்கு வங்கம் – 5
14. ஒடிசா – 3
15. ராஜஸ்தான் – 3