சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சாந்தனின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது கோமாநிலைக்குச் சென்ற அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.
Read More : BREAKING | அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் மரணம்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!