fbpx

Breaking | பள்ளி மாணவர்களே..!! மார்ச் 25ஆம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இதற்காக மாணவர்கள் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ இடங்களை அதிக அளவில் கைப்பற்றுவது நீட் ரிப்பீட்டர்களே. இவற்றில் பெரும்பாலான நீட் ரிப்பீட்டர்கள் தனியார் பயிற்சி மையங்களில் கணிசமாக செலவு செய்து பயிற்சி பெற்று வருகின்றனர்

ஆனால், அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோரால் தனியார் பயிற்சி நிறுவனங்களில் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற முடியாத சூழல் உள்ளது. இதனையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 2018- 2019ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித்துறை நீட் இலவசப் பயிற்சியைத் தொடங்கப்பட்டது.

அந்தவகையில், இந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு மார்ச் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 40 மாணவர்கள் ஒரு பயிற்சி மையத்தில் இடம்பெற வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Read More : Tamilisai Soundararajan | கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறாரா தமிழிசை சௌந்தரராஜன்..!! அப்படினா ஆளுநர் பதவி..?

Chella

Next Post

BJP | சூடுபிடிக்கும் பாஜக வேட்பாளர் தேர்வு..!! தமிழ்நாட்டில் யார், யார் போட்டி..? இன்று டெல்லி பறக்கும் அண்ணாமலை..!!

Wed Mar 6 , 2024
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணிகள் அமைத்து கட்சிகள் மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளன. பாஜக சார்பில் தமிழ்நாட்டில் யார் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தொகுதி வாரியாக கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தி அதில் வெற்றி வாய்ப்பு மிக்க வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சி தலைமை முடிவு செய்தது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகளில் நேற்று நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. தென்சென்னை […]

You May Like