fbpx

அண்ணன் – தங்கை உறவு..!! ரூம் எடுத்து அடிக்கடி உல்லாசம்..!! ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண்..!! பரபரப்பு வாக்குமூலம்..!!

கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இளம்பெண் ஒருவரும் வாலிபரும் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். பின்னர், சம்பவத்தன்று அதிகாலை வாலிபர் மட்டும் வேகமாக விடுதி அறையில் இருந்து கிளம்பியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த ஊழியர்கள், அந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது, வாலிபருடன் தங்கியிருந்த இளம்பெண் முகத்தில் காயமடைந்த நிலையில், இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, அதேப்பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழரசு தலைமையிலான தனிப்படையினர் விசாரித்தனர். விசாரணையில், அவர் சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூரை சேர்ந்த சரவணன் (29) என்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், விடுதியில் இறந்து கிடந்த பெண் கோவை எஸ்.எஸ்.குளம் அருகே கள்ளபாளையம் பகுதியை சேர்ந்த கீதா (26) என்பது தெரியவந்துள்ளது. அதாவது, கீதாவும், சரவணனும் காதலித்து வந்துள்ளனர். வீட்டிற்குத் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்தை பதிவு செய்யவில்லை. கீதாவும், சரவணனும் அண்ணன், தங்கை உறவுமுறை என தெரிகிறது. இதனால் அவர்களது திருமணத்தை குடும்பத்தினர் ஏற்கவில்லை. ஆனாலும் கீதாவும், சரவணனும் அடிக்கடி அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதே போல் அறை எடுத்து விடுதியில் தங்கி இருந்த போது, சரவணனுக்கும், கீதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கீதாவின் நடத்தையில் சரவணனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சரவணன், கீதாவின் முகத்தில் கையால் குத்தி தலையை சுவற்றில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சரவணனைக் கைது செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : புரட்டாசியில் எந்தெந்த விஷயங்களை செய்யக்கூடாது..? விரதம் இருந்து வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா..?

English Summary

Geetha and Saravanan seem to have a brother and sister relationship. Due to this, their family did not accept their marriage.

Chella

Next Post

நீங்கள் இந்த ராசிக்காரரா..? அப்படினா உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்..!! பண மழை கொட்டப்போகுது..!!

Mon Sep 16 , 2024
Astrology says that some zodiac people can easily become millionaires. Who are they? You can see that in this post.

You May Like