fbpx

பெட்ரோல் பங்க் ஊழியரின் அந்தரங்க உறுப்பில் ஏர் பைப்பை சொருகி கொடூர தாக்குதல்..!! தீவிர சிகிச்சை..!! நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபத்தில் உள்ள சிஹானிகேட் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (19). இவர், பெட்ரோல் பங்க் ஒன்றில் கார் கிளீனராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று மோஹித் என்ற நபருக்கும், விஜய்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மோஹித், விஜய்யைத் தாக்கி அவரை கீழே தள்ளியிருக்கிறார். மேலும், அவர் மீது ஏறி அமர்ந்து, அவரின் அந்தரங்க உறுப்பில் ஏர் பைப்பைச் சொருகிக் காற்றைத் திறந்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார். விஜய் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இதனைக் கவனித்த அக்கம்பக்கத்தினர் விஜயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் விஜய்க்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார்,”வாய்த்தகராறுதான் விபரீதத்தில் முடிந்திருக்கிறது. விஜய்யின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மோஹித் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

மீண்டும் சமந்தாவுக்கு நேர்ந்த சோகம்..!! ரத்தக் காயங்களுடன் வைரலாகும் புகைப்படம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Tue Feb 28 , 2023
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை சமந்தா தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பட வாய்ப்புகளையும் கைப்பற்றி நடிக்க துவங்கி விட்டார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனாக எடுக்கப்பட்ட ‘ஏ மாயா சேஸாவா’ படத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் சமந்தா. தன்னுடைய முதல் பட ஹீரோவானாக நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட நட்பு, பின்னர் […]
அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்த சமந்தா..!! எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை..!! சினிமாவை விட்டு விலக முடிவு..?

You May Like