fbpx

2025 வரை கட்டணம் கிடையாது.. BSNL-ன் பலே அறிவிப்பு!! விவரம் இதோ..

வீட்டு இணைய இணைப்புக்கான நிறுவல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இலவச சேவை 2025 (மார்ச் 31) வரை செல்லுபடியாகும். 

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது ஒரு காலத்தில் ஃபிக்ஸடு-பிராட்பேண்ட் சேவையின் (Fixed-broadband service) ராஜாவாக இருந்தது. ஆனால் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சியானது பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது.

மேற்கண்ட 3 தனியார் டெலிகாம் நிறுவனங்களுமே வேகமான நெட்வொர்க் டெப்லாய்மென்ட் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு நன்மைகளுடன் கூடிய கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்கி.. பெரும்பாலான பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துக்கொண்டன. இதன் விளைவாக அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் அதன் சந்தை பங்கை கடுமையாக இழந்துள்ளது.

ஆனாலும் கூட பிஎஸ்என்எல் நிறுவனம் சோர்ந்துவிடவில்லை. புதிய சந்தாதாரர்களை சேர்க்க மற்றும் பிராட்பேண்ட் பிரிவில் மீண்டும் முதல் இடத்தை அடைய கடுமையாக போராடி வருகிறது. அதனொரு பகுதியாக, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் ஒரு சிறப்பு தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.

அதாவது, தனது பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான நிறுவல் கட்டணத்தை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தள்ளுபடி செய்வதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்த சலுகை ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 31, 2024 இல் முடிவடைய வேண்டிய இந்த சலுகை இப்போது 2025 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும்? பாரத் ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் சேவையின் கீழ் இணையும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 என்கிற நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். மேலும் காப்பர் கனெக்ஷனை பயன்படுத்துவதற்கான ரூ.250 என்கிற நிறுவல் கட்டணமும் வசூலிக்கப்படாது. இவ்விரு சலுகைகளுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து புதிய பிராட்பேண்ட் இணைப்பை தேடும் நபர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

இந்த நடவடிக்கைக்கு மற்றொரு பெரிய காரணம், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றிலிருந்து விரைவான நெட்வொர்க் வரிசைப்படுத்தல் ஆகும், அவை ஏற்கனவே மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகின்றன, இது மக்கள் அரசாங்க தொலைத்தொடர்பு சேவையை விட தனியார் தொலைத்தொடர்பு சேவையை விரும்புவதற்கான காரணமாகும். 

பிஎஸ்என்எல் தவிர, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை தங்களது புதிய பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு இலவச நிறுவல் சேவைகளை வழங்குகின்றன, ஆனால் குறிப்பாக நிபந்தனைகளுடன் இணைந்துள்ளன. இந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நீண்ட செல்லுபடியாகும் திட்டங்களை பயனர்கள் எடுக்க வேண்டும். 

இருப்பினும், BSNL வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டுள்ளது மற்றும் தற்போது பயனர்களுக்கு அத்தகைய நிபந்தனைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதேபோல், BSNL இன் பிராட்பேண்ட் திட்டங்களைப் பற்றி பேசினால், இலவச OTT பயன்பாடுகள், அதிவேக இணையம் மற்றும் அழைப்பு – இந்த திட்டங்களில் வழங்கப்படும். சமீபத்தில், நிறுவனம் சிறந்த உலாவல் அனுபவத்திற்காக அதன் பல திட்டங்களில் இணைய வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

Next Post

தெலுங்கானா முன்னாள் முதல்வர் KCR-க்கு 48 மணி நேர தடை.!! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.!!

Wed May 1 , 2024
KCR: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏழாம் தேதி கர்நாடகா மற்றும் குஜராத் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற இருக்கிறது. என்னைத் தொடர்ந்து நான்காம் கட்ட வாக்குப் பதிவுகள் மே 13ஆம் தேதி நடைபெற இருக்கின்றன. ஆந்திரா தெலுங்கானா உட்பட 10 மாநிலங்கள் மற்றும் […]

You May Like