fbpx

BUDGET | ’விவசாயிகளுக்கு ரூ.2.50 லட்சம் வரை பரிசுத்தொகை’..!! அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டின் பொது பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், இதுவரை 4 வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டு பல திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்

➥ இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.12 கோடியில் திட்டம்.

➥ மலைவாழ் உழவர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.22.80 கோடி ஒதுக்கீடு.

➥ கரும்பு விவசாயிகளுக்கு 841 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

➥ 1000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் வேளாண் பட்டயதாரர்கள் மூலம் “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” அமைக்கப்படும்.

➥ அதிக விளைச்சலை காட்டும் முதல் 3 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும்.

➥ பட்டியலின விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 60 முதல் 70%ஆக உயர்த்தப்படும்.

Read More : Tamilnad Mercantile வங்கியில் மாதம் ரூ.72,000 சம்பளத்தில் வேலை..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

While the general budget of Tamil Nadu was presented in the Legislative Assembly yesterday, the agriculture budget was presented today. Agriculture Minister M.R.K. Panneerselvam presented the budget.

Chella

Next Post

வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு ரூ. 2 லட்சமாக உயர்வு.. பட்ஜெட்டில் அறிவிப்பு..

Sat Mar 15 , 2025
தமிழ்நாட்டின் பொது பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர் எம்.ஆர். பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உயர்த்தி வழங்கப்படும். டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். உழவர்களை தேடி திட்டத்தின் கீழ் மாதம் 2 முறை […]

You May Like