தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்
➥ விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் பம்ப் செட்டுகள் வழங்கப்படும்.
➥ 1,000 விவசாயிகளுக்கு சோலார் பம்ப் செட்டுகள் வாங்க ரூ.15,000 மானியம் வழங்கப்படும்.
➥ புதிய மின் மோட்டார் பம்ப் செட்டுகள் வாங்கவும், பழைய மின் மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றிடவும் மானியம் வழங்கப்படும்.
➥ வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்குதல்.
➥ 300 கிராமப்புர இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.
➥ வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்கப்படும்.