fbpx

ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசம்..!! பிச்சையா போடுறீங்க..!! அதிரடி காட்டிய ஆட்சியர்..!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ‘தம்பி பிரியாணி’ என்ற பெயரில், புதிதாக பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ‘சிக்கனோ, மட்டனோ… ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம்’ என்ற அறிவிப்பை கடை உரிமையாளர் அறிவித்திருந்தார். இதனால், பிரியாணி பிரியர்கள் கூட்டம் கூட்டமாக கடைக்குள் முண்டியடித்து குவிந்தனர். வரிசை, சாலை வரை நீண்டிருந்ததால், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது, அந்த அவ்வழியாக வந்த, ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மக்கள் வெயிலில் அவதிப்படுவதையும், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததையும் கவனித்தார்.

இதையடுத்து, தனது காரை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கி வந்தார். பின்னர், பிரியாணி கடை மேலாளரை அழைத்து, ”பிச்சையா போடுறீங்க… எல்லோரையும் மரியாதையாக உட்கார வைக்க முடியாதா..? எத்தனைப் பேர் நிற்கிறாங்க… பாவம்…! எல்லோரையும் போகச் சொல்லுங்க. கடையை மூடுங்க” என்று அறிவுறுத்தினார். அப்போதும் கூட்டம் கலையாததால், போலீஸார் மூலம் கூட்டம் கலைக்கப்பட்டு, பிரியாணி கடை இழுத்து மூடப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ”கடை உரிமையாளரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன். மாநகராட்சி ஆணையரிடமும் விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். அதுவரை கடையை மூட உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.

Chella

Next Post

கனமழையால் நொடிப்பொழுதில் தரைமட்டமான அடுக்குமாடி வீடு..!! பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

Sun Jul 9 , 2023
பஞ்சாப் மாநிலத்தில் கனமழையால் இரண்டு மாடி வீடு ஒன்று இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி, பீதியை உண்டாக்கியுள்ளது. பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரண்டு தினங்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்னும் சில தினங்கள் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை […]
கனமழையால் நொடிப்பொழுதில் தரைமட்டமான அடுக்குமாடி வீடு..!! பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

You May Like