fbpx

கால் டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி..!! சி.என்.ஜி. எரிவாயு விலை மேலும் உயருகிறது..!!

வாகனங்களுக்கான சி.என்.ஜி. எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பிற மாநிலங்களைப் போல சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு விவகாரத்தில், ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பையே சிஎன்ஜி வாகனங்கள் ஏற்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் தற்போது காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கோவை, கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வாகனங்களுக்கான சிஎன்ஜி வாயுவை பெறும் வசதி உள்ளது.

இந்நிலையில், வாகனங்களுக்கான சி.என்.ஜி. எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உற்பத்தி சரிவு, பற்றாக்குறை காரணமாக விலையை தற்போது உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ சி.என்.ஜி. ரூ.90-க்கு விற்பனையாகிறது.

இது மேலும், விலை உயரும் பட்சத்தில் ஒரு கிலோ சி.என்.ஜி. ரூ.96-க்கு விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. இதனால், அதிகளவில் சி.என்.ஜி. வாகனங்களை பயன்படுத்தி வரும் கால் டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் கவலையடைந்துள்ளனர்.

Read More : ஆன்லைனில் ஈசியாக பட்டா மாற்றலாம்..!! என்னென்ன ஆவணங்கள் தேவை..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

CNG for vehicles It has been reported that the price of gas is likely to go up by Rs.4 to Rs.6 per kg.

Chella

Next Post

பெண்களே..!! உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா..? இந்த பிரச்சனை இருக்கா..? இதுக்கு தீர்வு தான் என்ன..?

Mon Oct 21 , 2024
Generally, a woman's lifestyle changes completely after marriage.

You May Like