fbpx

கன்னட மொழி தெரியாமல் கர்நாடகாவில் வாழ முடியாது..! நிறுவனங்களுக்கு அபராதம்..! துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவிப்பு..!

நவம்பர் 1ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களிழும் கன்னட கொடி ஏற்ற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. கர்நாடக மாநிலம் உதயமான தினம் ஆண்டு தோறும் நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கர்நாடகாவில் செயல்படும் கல்வி மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலை உள்ளிட்டவைகளில் கட்டாயம் கன்னட கொடி பறக்க விட வேண்டும் என்று அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கன்னட மொழி தெரியாமல் கர்நாடகாவில் வாழ முடியாது என்பதை பிற மாநிலத்தவர்கள் உணர வேண்டும். சுதந்திர தினம், குடியரசு தினத்தைப் போல, நவ.1இல் கன்னட கொடியை ஏற்றி கலாசார நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டும். கன்னட கொடியை ஏற்றாத வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், இதை காரணமாக வைத்து, வர்த்தக மற்றும் கல்வி நிறுவனங்களை மிரட்டும் கன்னட ஆதரவு அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

தற்போதைய கர்நாடகா மாநிலம், 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மைசூரு மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1973 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி கர்நாடகா என மறுபெயரிடப்பட்டது. அன்றைய தினத்தை கர்நாடக மாநிலம் உதயமான நாளாக அம்மாநில அரசு கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Read More: இந்த லிஸ்ட்டை கவனிச்சீங்களா..? 2033-க்குள் இந்த நகரங்கள் தான் டாப்பில் இருக்குமாம்..!! ஐ.நா. கணிப்பு..!!

English Summary

Can’t live in Karnataka without knowing Kannada language..! Penalty for companies that do not hoist the flag..! Deputy Chief Minister DK Sivakumar announced..!

Kathir

Next Post

கவனம்..! MRP விலையை விட கூடுதலாக பொருட்கள் விற்பனையா...? உடனே இந்த எண்ணுக்கு புகார் செய்யுங்க...!

Sun Oct 13 , 2024
Are products sold at more than MRP price?

You May Like