fbpx

”இனி ஆபாச படம் பார்க்க முடியாது”..!! இணையதளங்களை அதிரடியாக முடக்கியது மத்திய அரசு..!!

நீதிமன்ற உத்தரவு மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதாக 67 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமல்படுத்தியது. இந்த சட்டத்தின் படி, இணைய விதிமுறை மீறல்களில் ஈடுபடும் தளங்களை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து முடக்கி வருகிறது. அதன்படி, விதிமுறைகளை மீறி செயல்பட்ட வாட்ஸ் அப், யூடியூப் போன்ற கணக்குகளை மத்திய அரசு முடக்கி வருகிறது. இந்நிலையில், தற்போது 67 ஆபாச இணையதளங்களை முடக்கி மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனே நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 63 இணையதளங்களும், உத்தரகாண்ட்  உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 4 ஆபாச இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்த இணையதளங்கள் பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விதிக்கும் விதமாகவும், ஆபாசத்தை பரப்பும் விதமாகவும் செயல்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி, ஒரு நபரை முழு அல்லது அரை நிர்வாணமாகவோ, அவர்களை பாலியல் நோக்கில் தவறாக சித்தரிப்பதோ சட்டவிரோதமாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஐயா எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க….! காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிகள்….!

Tue Sep 12 , 2023
இன்றைய காலகட்டத்தில், பெற்றோர்களால், நடத்தி வைக்கப்படும் திருமணத்தை விட, காதல் திருமணங்களே அதிகம் நடைபெறுகின்றன. அதோடு, பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்த்தால், அவர்கள் சரியான வயது திருமணம் செய்து வைக்க மாட்டார்களோ, என்ற பயத்தில் கூட காதல் திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன. ஆனால், அப்படிப்பட்ட காதல் திருமணங்களிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. காதல் திருமணம் செய்து கொண்டால், வீட்டில் பெற்றோர்கள், அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு […]

You May Like