fbpx

வேலூர் நீதிமன்றம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்… அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர்தப்பினார்….

வேலூர் மாவட்ட நீதிமன்றம் அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார்.

திருவள்ளூர் அருகே திருநின்றவூரைச் சேர்ந்தவர் சதீஸ். வழக்கு தொடர்பான விசயத்திற்காக வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் அப்போது நீதிமன்றத்திற்கு வெளியே காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து காரை எடுத்துள்ளார். அப்போது புகை மூட்டம் கிளம்பியுள்ளது. அவசர அவசரமாக வெளியேற முயன்றபோது  உள்ளேயே மாட்டிக் கொண்டார். இந்நிலையில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. அங்குள்ள மக்கள் கார் கண்ணாடியை உடைத்து சதீசை மீட்டனர். இதனால் அவர் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்து வந்த வேலூர் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் வாகனம் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் இந்த காரை வேறொரு நபரிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

Next Post

எழும்பூர் மருத்துவமனையில் 100 குழந்தைகள் அனுமதி ? தகவல் வதந்தி என மருத்துவமனை முதல்வர் விளக்கம் …

Wed Sep 14 , 2022
எழும்பூர் மருத்துவமனையில் 100 குழந்தைகள் ஒரே நாளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் புளூ காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. ஏராளமான குழந்தைகள் வைரஸ் காய்ச்சாலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்நிலையில் இதற்காக எழும்பூரில் முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்நிலையில் வார்டுகள் நிரம்பியது. இது தொடர்பாக எழும்பூரில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதி […]

You May Like