fbpx

JUSTIN: திருச்சியில் அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்கு பதிவு…!

திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 700 பேரு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்றைய தினம், திருச்சி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக, குக்கர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர், திருச்சி மாமன்ற உறுப்பினராக இருக்கும் செந்தில்நாதன் அவர்களை ஆதரித்து பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நேற்று மாலை 6 மணிக்கு பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று காவல்துறையிடம் அனுமதி வாங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நேற்று இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, அமமுக செயலாளர் சாருபாலா, வேட்பாளர் செந்தில்நாதன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Vignesh

Next Post

Bar Accident: சென்னை மதுபான விடுதி மரணம்...! உரிமையாளர் ஜாமினில் விடுவிப்பு...!

Sun Mar 31 , 2024
மதுபான விடுதி உரிமையாளர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள மதுபான கேளிக்கை விடுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தளத்தில் உள்ள அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சைதாப்பேட்டை, எழும்பூர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக மணிப்பூரைச் […]

You May Like