fbpx

6ம் வகுப்பு புத்தகத்தில் சாதிவெறி வாசகம் …. சி.பி.எஸ்.இ. தலைமை விளக்கம்..

சி.பி.எஸ்.இ. ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ’சாதிவெறி ’ தொடர்பான கருத்துக்கள் இடம்பெற்றது குறித்து சி.பி.எஸ்.இ. தலைமை விளக்கம் அளித்துள்ளது.

சி.பி.எஸ்.இ. தேர்வுமற்றும் வழிகாட்டுதல் மற்றும் தேர்வு அமைப்பு வாரியமாக செயல்பட்டுவருகின்றதே தவிற பாடப்புத்தகங்களை வெளியிடுவதில்லை. நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில் NCERT என்ற பாடத்திட்டத்தின்படியே 9 முதல் 12ம் வகுப்பு வரை பின்பற்றப்படுகின்றது.

மத்திய இடைநிலைக் கல்வி (சி.பி.எஸ்.இ) இது தொடர்பாக டுவிட்டரில் சாதி வெறி என்ற வைரலான கருத்துக்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளது. 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வர்ண முறைகள் இடம்பெற்றுள்ளது. அதில் சாதிவெறி பற்றிய வாசகம் இம்பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளி வந்தது.

ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வர்ணா என்ற தலைப்பில் வரலாற்று பாடப்புத்தகத்தில் சி.பி.எஸ்.இ. ஆல் வெளியிடப்பட்டதாக தவறாக கூறப்பட்டுள்ளது. இது பொய்யான தகவல் . தேசிய அளவிலான கல்வி வாரியத்தின் டுவீட். நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் மற்றும் தமிழகத்தின் இரண்டு முக்கிய கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தலைவர்கள் இதறகு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Next Post

மாணவர்களே… மாதம் தோறும் ரூ.1,500 உதவித்தொகை…! தேர்வு அடுத்த மாதம் 15-ம் தேதி தான் என அரசு அறிவிப்பு…

Thu Sep 29 , 2022
தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு அக்டோபர் 15-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு […]

You May Like