ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்த மாணவி சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 95.02 சதவீத மதிப்பெண்கள் பெற்று தனது பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். காஃபி (Kafi) என்ற அந்த பெண் தனது 3 வயதில் , பொறாமையின் காரணமாக அக்கம்பக்கத்தினர் அவளை ஆசிட் வீசி தாக்கினர், அதன் பிறகு அவள் முகம் முழுவதும் எரிந்து 6 ஆண்டுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இதனால் அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது.
அப்போதிருந்து, அவர் பிரெய்லி ஸ்கிரிப்ட் மூலம் படித்து வருகிறார், மேலும் அவர் வாசிப்பதில் அதிக ஆர்வம் உடையவர், அதன் விளைவாக 10 ஆம் வகுப்பில் அவள் 95.02 சதவீத மதிப்பெண் எடுத்து அனைத்து பெண்களுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்துள்ளார்.15 வயதான காஃபியின் தந்தை செயலகத்தில் பியூனாக பணிபுரிகிறார். தான் ஐஏஎஸ் அதிகாரியாக விரும்புவதாகவும், பெற்றோரை பெருமைப்படுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.