ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராவை பொருத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது..
நடப்பு கல்வியாண்டுக்கான ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.. இதுகுறித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் “ ராகிங்கை தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். ரேகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.. முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியை பொருத்த வேண்டும்.. விடுதிகள், கழிப்பறைகள், உணவகங்களில் ரேகிங் தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்ட வேண்டும்..
கல்லூரி நிர்வாகம் தரப்பு திடீர் ஆய்வு மேற்கொண்டு ரேகிங் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.. ராகிங்கில் ஈடுபட மாட்டேன்’ என www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.. மாணவர்களும், பெற்றோர்களும் இணையத்தில் பதிவு செய்ததை உறுதி செய்ய வேண்டும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..