புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எதிர்பாக்கப்படுகிறது.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டமானது ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை அடுத்து, பேரவை தலைவர் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைத்தார். பட்ஜெட்டுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, ரூ.11,000 கோடிக்கு வரையறை செய்து கோப்பு அனுப்பிய நிலையில், ரூ.10,696 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள பட்ஜெட்டின் மதிப்பு கடந்த ஆண்டு விட ரூ.280 கோடி அதிகமாகும். புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எதிர்பாக்கப்படுகிறது.