நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) என்பது இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இது மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் தலைமையகம் புது டெல்லியில் அமைந்துள்ளது. இதன் முக்கிய செயல்பாடு, நாட்டில் உள்ள மாநில மின்சார வாரியங்களுக்கு மின்சாரம் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகும். பொறியியல், திட்ட மேலாண்மை, கட்டுமான மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஆலோசனை மற்றும் ஆயத்த தயாரிப்பு திட்ட ஒப்பந்தங்களையும் இந்த அமைப்பு மேற்கொள்கிறது.
![இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! உடனே பதிவு செய்யுங்க..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/NTPC.jpg)
இந்நிலையில், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 864 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
![இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! உடனே பதிவு செய்யுங்க..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/NTPC-3.jpg)
பணியின் விவரம்…
நிறுவனம்: நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC)
பதவியின் பெயர்: எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி
மொத்த காலியிடம்: 864
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மைனிங் இன்ஜினியரிங்
சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
வயது வரம்பு: அதிகபட்ச வயது 27
இணையதள முகவரி: www.ntpc.co.in
கடைசி தேதி: 11.11.2022