fbpx

பாஜக அமைச்சர்களுக்கு சவால்!… உபி-க்கு மட்டும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள்!… ஸ்டாலின்!

Stalin: உத்தர பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பா.ஜ.க. அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழகத்துக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக பேசியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ.க. அரசு. இது அப்பட்டமான பொய்க்கணக்கு. இதில் இரண்டு கூறுகள் உள்ளன. மத்திய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.

இதன்கீழ் உத்தர பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பா.ஜ.க. அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழகத்துக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக் கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு. இதில் பா.ஜ.க. காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா? இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி.

ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி. சாகர்மாலா திட்டத்துக்கு 2 லட்சம் கோடி என்று ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பா.ஜ.க. அரசு. இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பா.ஜ.க. அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது. தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழகத்தின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக் கொள்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Readmore: அமர்நாத் யாத்திரை எப்போது?… இன்றுமுதல் முன்பதிவு தொடக்கம்!

Kokila

Next Post

ஜாக்பாட் அறிவிப்பு..!! டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..?

Mon Apr 15 , 2024
ஊழியர்களுக்கு இந்தாண்டு இரட்டை இலக்க ஊதிய உயர்வை அறிவித்துள்ளது டிசிஎஸ் நிறுவனம். நாட்டின் பிற ஐடி நிறுவனங்களைப் போல் அல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அதன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளித்து வருகிறது டிசிஎஸ் நிறுவனம். கொரோனா காலகட்டத்திலும் டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியில் சிறந்து விளங்கும் ஊழியர்களுக்கு இரண்டு இலக்கு ஊதிய உயர்வையும், பிற […]

You May Like