fbpx

சாம்பியன்ஸ் டிராபி 2025!. இன்று இந்தியா vs பாகிஸ்தான் மோதல்!. சச்சின் சாதனையை முறியடிப்பாரா கோலி?. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

India vs Pakistan: நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால், ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும்.

இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரம போட்டியாளர்களான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான நிலையில் விளையாட உள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே ஏறக்குறைய அரையிறுதிக்கு செல்வது உறுதியாகி விடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், சமீப காலங்களாக விராட் கோலி ஃபார்மில் இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், அவர் பாகிஸ்தானுக்கு எதிரான பெரும்பாலான போட்டிகளில் விளையாடுகிறார். எப்படியிருந்தாலும், சச்சினின் இந்த சிறந்த சாதனையை முறியடிக்க விராட் கோலி எந்த பெரிய இன்னிங்ஸையும் விளையாடத் தேவையில்லை. கோலிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவை. ஒருநாள் போட்டிகளில் வேகமாக 14000 ரன்களை கடக்க விராட் கோலிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவை. தற்போது, ​​ஒருநாள் கிரிக்கெட்டில் 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 14 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் மற்றும் இலங்கையின் குமார் சங்கக்கார. இந்த சாதனையை தொடும் மூன்றாவது வீரர் கோலி எட்டுவாரா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக தனது 14 ஆயிரம் ஒருநாள் ரன்களையும் பூர்த்தி செய்தார். அவர் பிப்ரவரி 6, 2006 அன்று பெஷாவரில் 14,000 ரன்களை நிறைவு செய்தார், இது அவரது 359வது போட்டியில் 350வது இன்னிங்ஸ் ஆகும். விராட் கோலி தற்போது 298 போட்டிகளில் 286 இன்னிங்ஸ்களில் 13985 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 73 அரை சதங்களும் 50 சதங்களும் அடங்கும். 14 ஆயிரம் ரன்களை முடிக்க கோஹ்லிக்கு இன்னும் 15 ரன்கள் மட்டுமே தேவை.

விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், அவர் 52 சராசரியாக 678 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக அவரது அதிகபட்ச ஸ்கோர் 183 ரன்கள். இந்த வடிவத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கோலி 3 சதங்களை அடித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் நெட்வொர்க் 18 இல் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்தியா பாகிஸ்தான் போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும்.

மேலும், இந்த போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் போட்டியை கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Readmore: செட் தகுதித் தேர்வுக்கு இவர்களுக்கும் விண்ணப்பிக்கலாம்…! ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு…!

English Summary

Champions Trophy 2025!. India vs Pakistan clash today!. Will Kohli break Sachin’s record!. Fans in anticipation!

Kokila

Next Post

சூப்பர் சான்ஸ்...! தங்கும் வசதியுடன் IAS முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு...! ஆன்லைன்‌ மூலம் விண்ணப்பிக்கலாம்

Sun Feb 23 , 2025
Free coaching class for IAS mains exam with accommodation...! Apply online

You May Like