தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக ஓரிரு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் இன்று 5 மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இத்தகைய நிலையில்தான் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அலுவலகம் செல்லும் நபர்கள் உள்ளிட்டோர் குடை ரைன் கோட் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லலாம் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் கூட இன்று விடுமுறை தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.