பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு.. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வயிற்று. பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டிவிட்டர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. குற்றம் இழைத்தவர்கள் குறித்து விசாரித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஹரான்றூர் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு மற்றும் கொலைவெறி தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த சம்பவம் மூலம் உபி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை நமக்கு தெளிவாக காட்டுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.