fbpx

உலகக்கோப்பை இந்திய அணியில் மாற்றம்..! இணைகிறார் தமிழக வீரர்..!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த 5ஆம் தேதி பிசிசிஐ வெளியிட்டது. அந்த அணியில் ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா, ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றனர். ஆனால் இந்த உலக கோப்பை அணியில் இடம்பெற்ற ஆல்ரவுண்டரான அக்சர் படேல் காயம் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அக்சர் படேலுக்கு பதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திர அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரும் ஆல்ரவுண்டர் என்பதால் தற்போது உலகக்கோப்பை தொடரின் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். தமிழக வீரரான ரவிச்சந்திர அஸ்வின் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அதன் படி உலக கோப்பை இந்திய அணியின் புதிய வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவிச்சந்திர அஸ்வின்

Kathir

Next Post

உங்கள் வீட்டில் பல்லிகள் அதிகம் உள்ளதா?? அப்போ இதை செய்து பாருங்கள்..

Thu Sep 28 , 2023
பலரின் வீடுகளில் இருக்கும் பெரிய பிரச்சனை பல்லிகள். ஆம், பேய்க்கு கூட பயம் இல்லை, ஆனால் பல்லிக்கு பயம் என்று கூறுபவர்கள் அநேகர். இவர்களுக்கு பெரிய ஆசையே எப்படியாவது பல்லியை துரத்தி விட வேண்டும் என்பது தான். பல்லிகள் சுவரில் இருக்கும் பூச்சிகளை உண்பதன் மூலம் நமக்கு ஒரு வகையில் உதவினாலும், பல நேரங்களில் சமையல் அறையில் உள்ள உணவுகளில் பல்லிகள் விழுந்து விடுமோ என்ற பயம் இருப்பது உண்டு. […]

You May Like