உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த 5ஆம் தேதி பிசிசிஐ வெளியிட்டது. அந்த அணியில் ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா, ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றனர். ஆனால் இந்த உலக கோப்பை அணியில் இடம்பெற்ற ஆல்ரவுண்டரான அக்சர் படேல் காயம் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அக்சர் படேலுக்கு பதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திர அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரும் ஆல்ரவுண்டர் என்பதால் தற்போது உலகக்கோப்பை தொடரின் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். தமிழக வீரரான ரவிச்சந்திர அஸ்வின் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அதன் படி உலக கோப்பை இந்திய அணியின் புதிய வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவிச்சந்திர அஸ்வின்