fbpx

ஏற்கனவே 4 பெண்களுடன் கள்ளத்தொடர்பு..!! ஐந்தவதாக 17 வயது சிறுமியுடன் ஓட்டம்..!! திருப்பத்தூரில் பரபரப்பு..!!

4 பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்து ஐந்தாவதாக 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற காதல் மன்னன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூரை அடுத்த மேற்கத்தியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35). இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்த நிலையில், ஒரு பெண் பிள்ளை உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி 4-க்கும் மேற்பட்ட பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, மேற்கத்தியானூர் பகுதியில் கூலி வேலைக்கு வந்த இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி அந்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.

இதனால், சிறுமியின் தந்தை கடந்த மாதம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த தள்ளப்பாடி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தியும், 17 வயது சிறுமியும் உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று இருவரையும் போலீசார், காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பிறகு 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கிருஷ்ணமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், 17 வயது சிறுமிக்கு போலீசார் பல்வேறு அறிவுரைகளை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Read More : ஆற்றை கடக்க முயன்ற பீரங்கி..!! திடீரென வந்த வெள்ளம்..!! 5 ராணுவ வீரர்கள் மரணம்..!!

English Summary

A love king who kidnapped a 17-year-old girl for the fifth time from adultery with 4 women was arrested under the POCSO Act.

Chella

Next Post

’மாணவியின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க விஜய்க்கு யார் உரிமை கொடுத்தது’..? விளாசிய பாஜக நிர்வாகி சவுதாமணி..!!

Sat Jun 29 , 2024
BJP executive Soudamani has questioned who gave Vijay the right to pose with his hand on the student's shoulder.

You May Like