சென்னை பெரம்பூரில் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடி அறிவழகன். இவரை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். பெரம்பூர் பனந்தோப்பு காலனி அருகே பதுங்கிக் கொண்டிருந்த ரவுடி அறிவழகனை பிடிக்க சென்றபோது, தப்பியோட முயற்சி செய்துள்ளார். அப்போது, திடீரென போலீசார், துப்பாக்கியை எடுத்து அறிவழகனின் காலில் சுட்டனர். இதையடுத்து, அவர் பிடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி தான் அறிவழகன். இவர் வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடி. அறிவழகன் மீது பல்வேறு வழக்குகளில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், முக்கிய வழக்கு ஒன்றில் ரவுடி அறிவழகனை போலீசார் வலைவீசி தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.