fbpx

சென்னை ஓபன் டென்னிஸ் – இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை …

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தோல்வியடைந்த நிலையில் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

உலக மகளிர் ஓபன் டென்னிஸ் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுவருகின்றது. இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தண்டி களமிறங்கினார்கள்.

இதில் முதல் ஆட்டத்திலேயே ஜெர்மன் நாட்டின் தட்சனா மரியா என்பவரிடம் அங்கிதா தோல்வியடைந்தார். முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்ற மற்றொரு வீராங்கனை கர்மன் தண்டி இரண்டாம் சுற்றில் கனடா வீராங்கனை பவுச்சார் என்பவருடன் மோதினார். இந்நிலையில் 2-0 என்ற செட்கணக்கில் அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். காலிறுதி வாய்ப்பையும் தவறவிட்டார்.

இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற வேண்டும்என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தபோது ருதுஜா போஸ்லா என்ற வீராங்கனையுடன் களம் இறங்கினார். இந்தியாவின் தோம்பர் மற்றும் இந்தோனேசியா வீராங்கனை ஜெஸ்ஸி ரோம்பீஸ் இணையை 3-6. 7-6, 10-4 என வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றி வெற்றி பெற்றனர். இதையடுத்து இந்த இணை காலிறுதியில் விளையாடுவார்கள்.

Next Post

பிள்ளைகளுக்கு பாரமாக இருக்ககூடாது .. தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை ..

Thu Sep 15 , 2022
சென்னை தாம்பரம் அருகே பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருப்பதாகநினைத்து முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அருகே சேலையூரைச் சேர்ந்தவர் ஆனந்தன் (71) . இவரது மனைவி கங்காதேவி (62) . மதுரையை சேர்ந்த இவர்கள் இருவருக்கும் 32 வயதில் ஜெயக்குமர் என்ற மகன் இருக்கின்றார். திருமணமாக அனைவரும் ஒரே வீட்டில் மகிழச்சியாக இருந்துள்ளார்கள். இந்நிலையில் ஆனந்தனுக்கு கண்ணில் குளுகோமா என்ற […]

You May Like