fbpx

Metro: சென்னை தனியார் கிளப் மேற்கூரை விழுந்த விபத்து…! மெட்ரோ பணி தான் காரணமா…?

சென்னை ஆழ்வார்பேட்டையில் கேளிக்கை விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள மதுபான கேளிக்கை விடுதியில் நேற்று இரவு முதல் தளத்தில் உள்ள அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சைதாப்பேட்டை, எழும்பூர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இடிபாடுகளை அகற்றும் வல்லுநர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு படையினருடன் இணைந்து அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 3 பேர், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னை கேளிக்கை விடுதி விபத்திற்கு மெட்ரோ பணிகள காரணம் இல்லை- CMRL விளக்கம் அளித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 240 அடி தூரத்தில் தான் கட்டுமான பணிகள் நடந்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

DMK: முத்திரை தாள் விவகாரம்..‌.! அண்ணாமலைக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி..!

Fri Mar 29 , 2024
நீதித்துறை அல்லாத முத்திரைத் தாள் மற்றும் நீதிமன்ற கட்டண முத்திரைத் தாளுக்கு இடையிலான வித்தியாசத்தை அறியாத ஒருவர் எந்த வகையான ஐபிஎஸ் அதிகாரி..? என திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பி உள்ளார். அண்ணாமலையின் வேட்புமனுவுடன் இருந்த பிரமாண பத்திரம் நீதிமன்றத்துக்குப் பயன்படுத்தும் பத்திரத்தில் இருந்தது. ஆனால் நீதிமன்ற பயன்பாட்டுக்கு அல்லாத பத்திரம் மூலம் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். தவறான பத்திரத்தை இணைத்திருந்த நிலையில், மனுக்கள் பரிசீலனையின்போது […]

You May Like