செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலைநிகழ்வில் கலந்துகொள்ளவிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு கொரோனா மற்றும் குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவிருந்த 900 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.