தமிழகத்தில் இன்று காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் முதலமைச்சர் ஸ்டாலினால், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு அரசாணையில் உரிய ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.